தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பாகிஸ்தான் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு: பயணிகள் 23 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயணிகள் 23 பேர் பலியாகினர்.

News image

பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

Updated On :26 ஆகஸ்ட் 2024, 6:32 am

கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பேருந்து மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினர்.

இதில் விநோதம் என்னவென்றால், பேருந்தை நிறுத்திய மர்ம நபர், அனைவரையும் பேருந்திலிருந்து இறக்கி அவர்களது அடையாளங்களை உறுதி செய்துகொண்ட பிறகு, அனைவரையும் சுட்டுககொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் மர்ம நபரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

பலோசிஸ்தானின் முசாகேல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, பேருந்து வழியில்லாமல் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பேருந்துக்குள் ஏறியிருக்கிறார்.

துப்பாக்கி முனையில் அனைவரைன் அடையாளங்களையும் அவர் உறுதிசெய்துகொண்ட பிறகு, அவர்களை பேருந்திலிருந்து இறங்கி கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளார்.

அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரியவரவில்லை. மத ரீதியிலான தாக்குதலாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபர் அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த 12 வாகனங்கள் மீதும் துப்பாக்கியால் தாக்கியதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.