தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

16 ஆண்டுகள் இடைவெளி: நேபாளத்தில் விமானி தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்

நேபாளத்தில் விமானிகளாக இருந்த தம்பதி, 16 ஆண்டுகள் இடைவெளியில், விமான விபத்துகளில் பலியான துயரச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. 

News image

16 ஆண்டுகள் இடைவெளி: நேபாளத்தில் விமானி தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்

Updated On :16 ஜனவரி 2023, 12:21 pm

காத்மாண்டு: நேபாளத்தில் விமானிகளாக இருந்த தம்பதி, 16 ஆண்டுகள் இடைவெளியில், விமான விபத்துகளில் பலியான துயரச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. 

விபத்துக்குள்ளான எதி ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் விமானி அஞ்சு கதிவாடா. இவர், 2006ஆம் ஆண்டு சிறிய பயணிகள் விமான விபத்தில் தனது கணவர் பலியான பிறகு விமானியாக பணியில் சேர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதேபோன்றதொரு விபத்தில்  பலியாகியுள்ளார்.

நேபாளத்தில் எதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பலியாகினர். மேலும் 3 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அஞ்சுவும் ஒருவர்.

அஞ்சு, விமானி தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களை இயக்குபவர்.

இவர்களது திருமணம் முடிந்து சில ஆண்டுகளில், எதி ஏர்லைன்ஸ் விமானியாக தீபக் சேர்ந்தார். 2006ஆம் ஆண்டு சிறிய ரக விமான விபத்தில் தீபக் பலியானார். தீபக்கின் காப்பீட்டுத் தொகையில் கிடைத்த பணத்தின் மூலம், மஞ்சு அமெரிக்கா சென்று விமான ஓட்டியாக பயிற்சி எடுத்து, 2010ஆம் ஆண்டு எதி ஏர்லைன்ஸில் இணைந்து கேப்டனாக ஆனார்.

இந்த நிலையில்தான், தீபக் மரணமடைந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சு ஞாயிற்றுக்கிழமை நேர்ந்த விமான விபத்தில் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.