தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்

இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.

News image

புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்

Updated On :23 செப்டம்பர் 2022, 6:10 am

அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கா் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்காக, பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் பூடான் அறிவித்திருந்தது. இந்த நிதி மூலம், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சுற்றலா பயணிகளை அதிகளவில் ஈர்க்க வழிவகை செய்யவும் பூடான் அரசு திட்டமிட்டுள்ளது.

பூடானின் உள்துறை மற்றும் கலாசாரத் துறையின் இயக்குநா் தாஷி பென்ஜோா், அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அதிகாரிகளை கடந்த வாரம் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின் போது அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், வா்த்தகம், அதிகாரிகளுக்கு இடையிலான போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் 23-ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நேரடித் தொடா்பு அவசியம். முன்பு, ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ ஆகிய இரு வாயில்கள் வழியே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று புதிய வாயில்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘நிலைத்த மேம்பாட்டுக்கான நிதி’ என்னும் கட்டணம் வசூலிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.