பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தெற்கு வியட்நாமின் கரோக்கி பாரில் தீ விபத்து: 14 பேர் பலி

தெற்கு வியட்நாமில் உள்ள கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.  

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 10:16 am

தெற்கு வியட்நாமில் உள்ள கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

வணிக மையமான ஹோ சி மின் நகருக்கு வடக்கே, பின் டுவாங் மாகாணத்தில் உள்ள துவான் நகரில் செவ்வாய் இரவு 9 மணியளவில் 
 நான்கு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 12 மணி நேரப் போராட்டத்திற்கு மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளத்திலிருந்து குதித்தபோது சிலர் மூச்சுத் திணறிக் காயமடைந்ததாகவும், மற்றவர்களுக்கு கை கால்கள் உடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீயணைப்பு வீரர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள ஏணிகளைப் பயன்படுத்தி மற்றவர்களைக் காப்பாற்றினர். இரண்டாவது அல்லது மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.