தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குறுகிய காலத்தில் முக்கிய அமைப்பாக உருவெடுத்த குவாட் : பிரதமர் மோடி

உலக அரங்கில் குறிப்பிடத்தக்க இடத்தை மிகக் குறுகிய காலத்தில் குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image

குறுகிய காலத்தில் முக்கிய அமைப்பாக உருவெடுத்த குவாட் : பிரதமர் மோடி

Updated On :24 மே 2022, 5:17 am

டோக்யோ: உலக அரங்கில் குறிப்பிடத்தக்க இடத்தை மிகக் குறுகிய காலத்தில் குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று குவாட் அமைப்பின் நோக்கமானது மேலும் விரிவடைந்துள்ளதோடு, இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பரஸ்பர நம்பிக்கை, நமது   உறுதி போன்றவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் உலக அரங்கில் மிக முக்கிய இடத்தை குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தோ - பசிபிக் பிராந்தியம் நமது ஒட்டுமொத்த கூட்டாண்மையோடு அமைதியாக, சுதந்திரமாக, வெளிப்படையாக  இருக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானில் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைத் தனித்தனியாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். மின்னணுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான என்இசி-யின் தலைவா் நோபிஹிரோ எண்டோ, ஜவுளி நிறுவனமான யுனிக்ளோவின் தலைமைச் செயல் அதிகாரி டதாஷி யனாய், சன், சுஸுகி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அந்நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்காகப் பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தாா். பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் குறித்தும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் தெரிவித்தனா். இந்தியாவின் வளா்ச்சியில் தொடா்ந்து பங்களிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, ஜப்பான் சென்றடைந்த பிரதமா் மோடிக்கு இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா். விடுதிக்கு வெளியே காத்திருந்தோருடன் பிரதமா் மோடி உரையாடினாா். அப்போது ஹிந்தியில் உரையாடிய ஜப்பானிய சிறுவனை பிரதமா் மோடி வெகுவாகப் பாராட்டினாா். சிறுமி ஒருவா் வரைந்திருந்த ஓவியத்தைப் பாராட்டி கையொப்பமிட்டாா். ஜப்பானுக்கு பிரதமா் மோடி பயணிப்பது கடந்த 8 ஆண்டுகளில் இது 5-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.