தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆப்கனில் திறக்கப்பட்ட 1 மணி நேரத்தில் பள்ளிகளை மூடிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உயர்நிலை பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

1 மணி நேரத்தில் பள்ளிகளை மூடிய தலிபான்கள்

Updated On :23 மார்ச் 2022, 9:31 am


காபூல்: ஆப்கானிஸ்தானில் உயர்நிலை பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டத்தின்படி, மகளிர் கல்விக்கான திட்டங்களை வரையறுத்த பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அது வரை உயர்நிலை பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவிகள் வருவதற்கு தலிபான் அரசு தடை விதித்திருந்த நிலையில், மார்ச் 23ஆம் தேதிமுதல் பெண்கள் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் நாட்டு கல்வித் துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், மாணவிகள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த நிலையில், கல்வித் துறை சார்பில், ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாசாரத்தின் அடிப்படையில் பெண்களுக்கான கல்வி குறித்து வரையறை செய்ய பிறகு பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆறாம் வகுப்பு முதல்  அனைத்து பெண்கள் பள்ளிகளும், பெண்களும் பயிலும் பள்ளிகளில் அவர்களுக்கான வகுப்புகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.