தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..

காலநிலை மாற்றங்களால், உலகம் முழுவதும் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், தேவைப்படும் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

News image

காலநிலை மாற்றத்தால் தக்காளி, பாதாம், காபி உற்பத்தி பாதிப்பு

Updated On :17 மார்ச் 2022, 6:35 am


புது தில்லி: மேக நகர்வு, வறட்சி, சூறாவளி, கடும் மழை, வெள்ளம் போன்ற காலநிலை மாற்றங்களால், உலகம் முழுவதும் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், தேவைப்படும் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தக்காளியை எடுத்துக் கொண்டால் அதிக அளவில் இத்தாலியில் விளைகிறது. ஐரோப்பா கண்டம்தான் அதிகளவில் தக்காளியை ஏற்றுமதி செய்யும். 60 - 70 லட்சம் மெட்ரிக் டன் தக்காளியை ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி செய்கிறது.

ஆனால், கடந்த ஆண்டு தக்காளி விளைவிக்கும் பண்ணைகளின் அளவு 19 சதவீதம் குறைந்தது. இனி இது மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

தக்காளி விளைய சூடான வெப்பநிலை சரியானதாக இருக்கும். ஆனால், தற்போது இத்தாலி சற்று குளிர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை போன்ற காரணிகளால் தக்காளி விளைய உகந்த காலநிலை இல்லாமல் போயுள்ளது.

வெப்பநிலை குறைவதால், தக்காளி பழுக்க காலதாமதமாகும். இதுவே நீடித்தால் தக்காளி விளைவிப்பது குறையும். தேவை அதே அளவில் இருந்து வரத்து குறையும், இதனால், சந்தைகளில் தக்காளி விலை அதிகரிக்கும்.

கலிஃபோர்னியாவில் 80 சதவீத பாதாம் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாதாம் உற்பத்தி செய்ய மனித உழைப்பும், அதிக காலமும் ஆகும். பாதாம் பருப்புகள் ஏற்றுமதி தரத்துக்கு வளர்க்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். ஆனால் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, ஏற்கனவே வளர்த்து வந்த பாதாம் மர தோப்புகளைக் கூட விவசாயிகள் பராமரிக்காமல் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாதாம் உற்பத்தி குறைந்து அதனால் கடுமையான விலையேற்றம் காணப்பட்டது. இதேநிலைதான் சோயாபீன்னுக்கும் ஏற்பட்டது.

பிரேசிலில் ஏற்பட்ட கால மாற்றத்தால் காபி கொட்டைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும் இடங்களில்தான் காபி மரங்கள் நன்கு வளரும். பிரேசிலில் காற்றில் ஈரப்பதம் குறைந்து வறட்சியாக மாறியதால் காபி மரங்கள் வளர உகந்த சூழல் இல்லாமல் போனது. இதனால் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டது, காபி பிரியர்களை கவலையடையச் செய்தது.

இது முக்கியமான மூன்று பொருள்கள் மற்றும் மூன்று நாடுகளில் ஏற்பட்ட கால நிலைமாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தரவுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.