கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தலிபான் ஆட்சிக்குப் பின் ஆப்கனில் இன்று முதல் ஏடிஎம் சேவை

ஆப்கானிஸ்தானில், ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோது முடக்கப்பட்ட ஏடிஎம் சேவைகள் சனிக்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்-தலிபான்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:08 am

IANS


காபூல்: ஆப்கானிஸ்தானில், ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோது முடக்கப்பட்ட ஏடிஎம் சேவைகள் சனிக்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில், சில வணிக வங்கிகளின் ஏடிஎம் சேவைகள் குறிப்பிட்ட சில நகரப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏடிஎம் சேவைகள் தொடங்கவிருப்பது, அந்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் சில சேவைகளும் தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.