மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து:  1,200 ரோஹிங்கியா அகதிகளின் குடிசைகள் நாசம்

வங்கதேசத்தில் காடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா மக்களின் 16வது அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1,200 குடிசைகள் நாசமாகின.

News image
வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து:  1,200 ரோஹிங்கியா அகதிகளின் குடிசைகள் நாசம் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 8:05 am

ANI


டாக்கா: வங்கதேசத்தில் காடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா மக்களின் 16வது அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1,200 குடிசைகள் நாசமாகின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழப்பு குறித்தும் தகவல்கள் எதுவும் இல்லை.

ஞாயிறன்று மாலை 4.55 மணியளவில், இப்பகுதியில் தீப்பிடித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. அங்கிருந்த அனைத்தும் குடிசை வீடுகள் என்பதால், தீ மளமளவென பரவி, சுமார் 1,200 குடிசைகள் தீக்கிரையாகின என்று காவல்துறையினர் கூறினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ரோஹிங்கியா அகதிகளின் முகாமில் தீ விபத்து நேரிடுவது இது ஒன்றும் புதிதல்ல என்றும், அவ்வப்போது நிகழ்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.