தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உக்ரைனிலிருந்து வெளியேறிய 1 லட்சம் பேர்

ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லைத் தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image

உக்ரைனிலிருந்து வெளியேறிய 1 லட்சம் பேர்

Updated On :26 பிப்ரவரி 2022, 1:02 pm


வார்சா: ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லைத் தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கடந்த சில நாள்களாக போர் வெடித்து வரும் நிலையில், எல்லைக் கடந்து போலந்துக்கு சுமார் 1 லட்சம் பேர் வந்திருப்பதாகவும், போலந்து நாட்டின் எல்லைக் கிராமங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. ஸ்நேக் தீவு: மண்டியிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்கள்

போலந்துக்குள் வந்திருக்கும் 90 சதவீத மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர். சிலர் போலந்து நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சிலர் மட்டுமே எல்லைகளில் அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடங்களில் இடங்கள் கோரியிருக்கிறார்கள்.

Story image

தற்போதைக்கு, உக்ரைன் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை, உக்ரைனிலிருந்து போலந்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் அது 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

போலந்து மட்டுமல்லாமல், உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, ஸ்லோவாகியா, ரோமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.