தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகம் தலையீடு: நடராஜர் சிலை ஏலத்தை நிறுத்தியது பாரீஸ் ஏல மையம்

பாரிஸில் இயங்கி வரும் கிறிஸ்டீ என்ற ஏல மையத்தில், ஏலம் விடப்படுவதாக இருந்த 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2022, 11:00 am

சென்னை: பாரிஸில் இயங்கி வரும் கிறிஸ்டீ என்ற ஏல மையத்தில், ஏலம் விடப்படுவதாக இருந்த 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவில்பட்டியில் இருந்து 1972ஆம் ஆண்டு திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை கிறிஸ்டீ ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாநில காவல்துறை மூலம் ஏல மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏலம் தொடர்பாக கிறிஸ்டீ மையம் தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கயத்தாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வர் கோயிலுக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கே. ஜெயந்த் முரளி, ஏல மையத்தை சமூக வலைத்தளம் மூலமாகத் தொடர்பு கொண்டு, தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸில் உள்ள இந்திய தூதர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த வெண்கலச் சிலை, 15 - 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இந்தச் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.