தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஷாங்காயைத் தொடர்ந்து பெய்ஜிங்: என்ன செய்யப்போகிறது சீனா?

சீனத்தின் வணிக நகரமான ஷாங்காயில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வரும் நிலையில், பெய்ஜிங்கிலும் பாதிப்பு அதிகரித்திருப்பது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

News image

ஷாங்காயைத் தொடர்ந்து பெய்ஜிங்: என்ன செய்யப்போகிறது சீனா?

Updated On :27 ஏப்ரல் 2022, 10:36 am

சீனத்தின் வணிக நகரமான ஷாங்காயில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வரும் நிலையில், பெய்ஜிங்கிலும் பாதிப்பு அதிகரித்திருப்பது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றின் சமூகப் பரவல் திடீரென அதிகரித்துள்ளதையடுத்து, அந்த நகரில் 2.1 கோடி பேருக்கு பிரம்மாண்ட கரோனா பரிசோதனை மேற்கொள்ள நகர நிா்வாகம் உத்தரவிட்டது.

கடந்த சனிக்கிழமை அங்கு 22 பேருக்கு சமூக பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நகரம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

திங்கள்கிழமை 35 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, இன்னும் விரிவாக 2.1 கோடி போருக்கு கரோனா பரிசோதனை செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சீனத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,818 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.48 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.