தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated On :8 ஏப்ரல் 2022, 9:27 am

வாஷிங்டன்: இலங்கையைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பிரச்னை உருவாகலாம் என்பதால், அந்நாட்டுக்குச் செல்லும் தங்கள் நாட்டு குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மூன்றாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

மூன்றாம் நிலை எச்சரிக்கை என்றால், அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தால் அது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக அர்த்தமாகும்.

மேலும், அந்த அறிவுறுத்தலில், பாகிஸ்தானுக்குச் சென்றாலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளுக்கு அருகிலுக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையும் நிலவுவதால், நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.

மேலும், தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கரோனா பெருந்தொற்று மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயமும் இருப்பதாக அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.