தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், தனது தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News image

தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

Updated On :2 ஏப்ரல் 2022, 12:20 pm


இஸ்லாமாபாத்: இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், தனது தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செர்பியாவிலிருக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கான தூதரகத்தில் பணியாற்றும் தங்கள் நாட்டு ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்களது பிள்ளைகள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அல் அரேபியா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறி, வெளியான தகவலை மூடி மறைக்கப் பார்க்கிறது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்.

இதுபோல, அர்ஜென்டினா, புரூனே உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கும் ஊதிய பாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டனில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதிய பாக்கி நிலுவை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.