பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதன்கிழமை முதல், பணியாற்றும் இடங்களில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களே முன்வந்து கூட்டம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள், அடுத்த 14 நாள்களுக்கு தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கவும், வீட்டிலிருந்து பணியாற்றுவோர், வெளியிடங்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்குமாறும், அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த வாரம் புதிதாக 1,200 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் புதிய பாதிப்பு 600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


