மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவி பாதிப்பு; யூனிசெஃப்

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் அறிவித்துள்ளது.

News image

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவி பாதிப்பு; யூனிசெஃப்

Updated On :30 நவம்பர் 2021, 10:15 am


நியூ யார்க்: 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா பாதிப்பினால் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில, ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

நீடித்திருக்கும் கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பேரிடரைத்த தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறையை தீவிரப்படுத்துவது குறைந்ததால், குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் என பலரும் எச்ஐவி பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

எச்ஐவி பேரிடர் ஏற்கனவே 50 ஆண்டுகளாக நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. தற்போது கரோனா பேரிடர், சுகாதாரத் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் வறுமை, மனநல பாதிப்புகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பும், எச்ஐவி பாதிப்பு அதிகரிக்கக் காரணங்களாக அமைகின்றன என்று யூனிசெஃப் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே தெரிவித்துள்ளார்.

கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும், எச்ஐவிக்கு எதிரான போராட்டத்தில் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.