திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மளிகைக் கடை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி 

Updated On :23 மார்ச் 2021, 9:27 am

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மளிகைக் கடை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமெரிக்காவின் பௌல்டர் நகரில் கிங் சூப்பர்ஸ் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

தகவலறிந்து நகரக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறையினர் மர்ம நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.