/

இலங்கையிலும் உருமாறிய ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்

கரோனா வைரஸின் உருமாறிய அதிதீவிர தன்மை கொண்ட ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

இலங்கையிலும் உருமாறிய ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்

Updated On :10 ஜூன் 2021, 12:18 pm


கொழும்பு: இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பரிசோதித்ததில், அவர்களில் பலருக்கு கரோனா வைரஸின் உருமாறிய அதிதீவிர தன்மை கொண்ட ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கரோனா வைரஸ் மற்றும் பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வைரஸ்கள், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில், 9 இடங்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, 80 பேருக்கு ஆல்ஃபா வைரஸும், தனிமைப்படுத்தும் முகாமில் தங்கியிருந்த ஒருவருக்கு டெல்டா வைரஸும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களும் அடங்குவர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மூன்றாம் கரோனா அலை எழும் அபாயம் உருவாகியிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.