ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News image

மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு

Updated On :3 ஜூன் 2021, 5:34 am


தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நாடு கடத்த ஆன்டிகுவா நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா். இருவரையும் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 23-ஆம் தேதி ஆன்டிகுவாவில் இருந்து மெஹுல் சோக்ஸி காணாமல் போனாா்.

அண்டை நாடான டொமினிக்காவில் தனது தோழியுடன் இருந்தபோது அவா் பிடிபட்ட நிலையில், அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்கு டொமினிக்கா நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், பிணையில் விடுவிக்கப்பட்டாலும், இங்கிருந்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வேன் என்று சோக்ஸி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்க முடியாததாலும், பிணையில் விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையில், மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ டிஐஜி தலைமையில் அந்த அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.