புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 

News image

இந்தோனேசியாவில்  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Updated On :5 ஏப்ரல் 2021, 6:16 am

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர். 

இந்த நிலச்சரிவில் சிக்சி புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 44 பேரும், லெம்பட்டா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 
புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 24 பேரும், லெம்பாட்டாவில் 16 பேரும் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வாரம்  இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.