டெஹ்ரான்: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 117 பேர் பலியாகியிருக்கும் நிலையில், மிகக் கடினமான நாள்கள் காத்திருப்பதாக ஈரான் நாட்டு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சயீத் நமகி எச்சரித்துள்ளார்.
ஈரானில், கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நமகி சமூக ஊடகம் ஒன்றில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில், மருத்துவ நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றாவிட்டால், மிகக் கடினமான நாள்கள் காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. பிரசாரம் ஓய்ந்தபின் என்னவெல்லாம் செய்யக் கூடாது? சத்யபிரத சாஹு அறிவுரை
கடந்த 14 மாதங்களாக நாட்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். அவர்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மிகவும் அவசியம். ஆனால், கரோனா பெருந்தொற்று, சுற்றுலாத்துறையை முடக்கிவிடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரானில், இந்த ஆண்டு கரோனாவுக்கு ஒரே நாளில் 117 பேர் பலியானதே இதுவரை மிக அதிகபட்ச உயிரிழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 62,876 ஆகவும், மொத்த கரோனா பாதிப்பு 19,08,974 ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

