2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மிகக் கடினமான நாள்கள் காத்திருக்கின்றன: ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 117 பேர் பலியாகியிருக்கும் நிலையில், மிகக் கடினமான நாள்கள் காத்திருப்பதாக ஈரான் நாட்டு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சயீத் நமகி எச்சரித்துள்ளார்

News image
மகாராஷ்டிரத்தில் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் கரோனா: இளைஞர்களே உஷார்
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

IANS


டெஹ்ரான்: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 117 பேர் பலியாகியிருக்கும் நிலையில், மிகக் கடினமான நாள்கள் காத்திருப்பதாக ஈரான் நாட்டு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சயீத் நமகி எச்சரித்துள்ளார்.

ஈரானில், கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நமகி சமூக ஊடகம் ஒன்றில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், மருத்துவ நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றாவிட்டால், மிகக் கடினமான நாள்கள் காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 14 மாதங்களாக நாட்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். அவர்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மிகவும் அவசியம். ஆனால், கரோனா பெருந்தொற்று, சுற்றுலாத்துறையை முடக்கிவிடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஈரானில், இந்த ஆண்டு கரோனாவுக்கு ஒரே நாளில் 117 பேர் பலியானதே இதுவரை மிக அதிகபட்ச உயிரிழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 62,876 ஆகவும், மொத்த கரோனா பாதிப்பு 19,08,974 ஆகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.