சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

35 ஆண்டு கனவு நனவானது; காவனின் கூண்டு காலியானது

பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் கூண்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போது பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

News image
35 ஆண்டு கனவு நனவானது; காவனின் கூண்டு காலியானது
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

DIN


பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் கூண்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போது பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

ஏனென்றால், அதுவே காவனின் 35 ஆண்டு கால கனவு. தனிமையில் வாடிய காவனின் அந்த கனவு பல விலங்குகள் நல அமைப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின்  கனவாக மாறி, இன்று நனவாகிவிட்டது.

உலகிலேயே மிக அதிக காலம் தனிமையில் வாடிய யானையாக அடையாளம் காணப்பட்ட காவன், நேற்று பாகிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியா பறந்தது.

Story image

அதற்காக ஒரு வார காலத்துக்கும் மேலாக, அது சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகே ஒரு சிறப்பு உலோகக் கூண்டு தயாரிக்கப்பட்டு, அதில் அவ்வப்போது காவன் சென்று தங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் காவன் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. அந்த கூண்டில் இருந்தபடிதான் தனது சுதந்திர வாழ்வைத் தொடர காவன் விமானத்தில் பறந்தது.

இந்திய நேரப்படி நேற்று மாலை பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியாவுக்கு காவன் புறப்பட்டது. கம்போடியா நாட்டில் திங்கள்கிழமை தரையிறங்கும் காவன் யானையை வரவேற்க தயாராக இருப்பதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேத் பீக்த்ரா தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே மூன்று பெண் யானைகள் இருப்பதால், நிச்சயம் காவனின் வாழ்வில் தனிமை என்பது விரட்டப்படும் என்றே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்த ஒரே ஆசிய யானை காவன் என்பதால், அது தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தனிமையிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டது.

ஃபோர் பாஸ் என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விலங்குகள் நலக் குழுக்கள் என பலவும் இணைந்து, காவனை பாகிஸ்தானில் இருந்து வெளியே அனுப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. அதனை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதாக இருந்தால், பயணத்தின் போது அதற்கு உணவளிப்பது பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு காவன் நேற்று விமானத்தில் புறப்பட்டது.

உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்து தனது புதிய வாழ்வைத் தொடங்கி புத்துணர்ச்சியோடு புறப்பட்டுள்ளது.

காவன் மீட்புப் பணிகளில் நட்சத்திரமாக விளங்கிய பாடகி செர், கம்போடியாவில் நடைபெறும் காவன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.