ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஏழு நாடுகளில் மீண்டும் தீவிரமாகும் கரோனா பரவல்

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த 10 நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

News image

ஏழு நாடுகளில் மீண்டும் தீவிரமாகும் கரோனா பரவல்

Updated On :13 நவம்பர் 2020, 12:59 pm

புது தில்லி: உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த 10 நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் அமெரிக்கா, பிரேஸில், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்திருப்பது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் கரோனா தொற்றுப் பரவல் தொடர்பான விவரப் பட்டியலில் தெரிய வந்துள்ளது.

மற்ற மூன்று நாடுகளான இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் மட்டும் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கரோனா தொற்று தீவிரமடைந்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த கால எண்ணிக்கைகளை எல்லாம் தாண்டி, தினசரி பாதிப்பு 1 லட்சம் முதல் 1.45 லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு, அங்கு கரோனா பரவல் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது.

புதன்கிழமையன்று, அமெரிக்காவில் மட்டும் கரோனாவுக்கு 1,479 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், அந்நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கையானது 1,134 ஆக உள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தாலும், அது அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுபோல் காணப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,879 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 547 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87.28 லட்சமாக உள்ளது.

இதுபோலவே, பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,47,660 ஆகவும், பலி எண்ணிக்கை 1,63,368 ஆகவும் உள்ளது.

இதில்லாமல், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நாள்தோறும் கரோனா தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.