பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து சையத் அலி கிலானி விலகல்

ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி விலகியுள்ளார்.

News image

சையத் அலி கிலானி விலகல்

Updated On :29 ஜூன் 2020, 1:09 pm


ஸ்ரீநகர்: ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி விலகியுள்ளார்.

90 வயதாகும் கிலானி, ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதாக ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

"தற்போதிருக்கும் சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து, ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதென்று முடிவு செய்துள்ளேன்" என்று கிலானி தனது வெளியிட்ட ஆடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து தான் விலகுவது குறித்து இரண்டு பக்க அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். 

காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கப் போராடி வரும் அமைப்புதான் ஹுரியத் மாநாடு. இதன் தலைவராக சையத் அலி கிலானி இருந்து வந்தார்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக கிலானிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருப்பதால், கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.