பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

42 ஆயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை; இரண்டாம் இடத்தில் பிரேசில்

கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2020, 7:05 am


கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பிரேசிலில் கரோனா பாதித்து 41,900 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பிரேசிலில் 909 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரேசில் நல்வாழவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 8,29,900 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பிலும் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. உயிரிழப்பில் 41,481 உயிர் பலியுடன் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த பிரிட்டன், தற்போது மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

உயிரிழப்பில் அதிர்ஷ்டவசமாக இந்தியா தற்போது 9வது இடத்தில் இருப்பதும், கரோனா பாதிப்பில் இந்தியா 3.09 லட்சம் பாதிப்புகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.