சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மெக்சிகோவில் மீண்டும் பொது முடக்கம் அறிவிப்பு

மெக்சிகோவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
மெக்சிகோவில் மீண்டும் பொது முடக்கம் அறிவிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:09 pm

IANS

மெக்சிகோவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதமாக மெக்சிகோவில் ஜனவரி 10-ம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மருத்துவமனையில் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. இது கடந்த ஜூன் மாதத்திற்கு  ஒத்ததாகும். 

தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள மாநிலத்தில் அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களும், மூடப்பட வேண்டும் என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த மூன்று வாரங்களில் நோய்த்தொற்று பரவுதல், மருத்துவமனையில் சேருதல் மற்றும் பெரும்பாலான இறப்புகளைக் குறைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவை என்று லோபஸ்-கேடெல் கூறினார்.

நாட்டின் தொற்றுநோயின் மையமான மெக்சிகோவில் இதுவரை 2,77,733 பாதிப்பும், 15,083 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

சனிக்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,28,9,298 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 116,487 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் இறப்பு எண்ணிக்கையில் தற்போது உலகின் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.