அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

94-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டிஷ் ராணி வைத்த முக்கிய கோரிக்கை

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒருபக்கம் கரோனாவின் கோரப்பிடி, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே எந்த ஆடம்பர நிகழ்ச்சிகளும் இன்றி பிறந்தநாள் கொண்டாடப

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 9:28 am

லண்டன்: பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒருபக்கம் கரோனாவின் கோரப்பிடி, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே எந்த ஆடம்பர நிகழ்ச்சிகளும் இன்றி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி போன்ற காரணங்களால் பெர்க்ஷையரில் உள்ள வின்ட்சர் அரண்மனையில் இருந்தபடி தனது கணவர் இளவரசர் ஃபிலிப்புடன் இந்த பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாடி வருகிறார்.

முன்னதாக, நாடு கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால், வழக்கமாக ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு 21 குண்டுகளை முழக்கி வணக்கம் வைக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டாம் எலிசபெத் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது 68 ஆண்டு கால ஆட்சியில் இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போதிருக்கும் சூழ்நிலையில், குண்டுகள் முழங்க வணக்கம் வைக்கும் சூழ்நிலையில் நாடு இல்லை என்று ராணி கருதியதால்தான் இந்த கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.