நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அமெரிக்காவில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேல் துப்பாக்கிகள் பறிமுதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ANI

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரே வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல் நகரின் ஹாலம்பி ஹில்ஸ் மற்றும் பெல் ஏர் பகுதிகளின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸார் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக ஒரு நபரையும் கைது செய்தனர். 

இந்நிலையில், அந்த வீட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக, 2015-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் இருந்து 1,200 துப்பாக்கிகளும், 2 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.