சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலை வெல்ல நினைத்த பாஜக திட்டம் தோல்வி: இம்ரான் கான்

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்த பாஜக-வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:35 am

ANI

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்த பாஜக-வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது.

பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் பத்திரமாக இருப்பதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஏனென்றால் உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தானின் ஒரு எஃப் 16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதை வீழ்த்திய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையில் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் இருப்பதாக அமெரிக்க நாளிதழில் வெளியுறவுத்துறை கொள்கை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.