எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இந்தியா, ரஷியா நட்புறவில் வாஜ்பாய் கனவு நிறைவேறியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா மற்றும் ரஷியா நட்புறவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கனவு நிறைவேறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக திங்கள்கிழமை ரஷியா சென்றார். அங்கு சோச்சி நகரில் ரஷிய பிரதமர் விளாதிமீர் புதினை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் சோச்சி நகரில் ரஷிய அதிபரைச் சந்தித்த முதல் இந்தியப் பிரதமர் ஆவார். அப்போது ரஷிய அதிபராக 4-ஆவது முறையாக புதின் பொறுப்பேற்றதற்கும், ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது இருநாடுகளின் உறவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம். ஆஃப்கானிஸ்தான், சிரியா நாடுகளின் நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், விரைவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையால், இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்பட சாத்தியமிருப்பதாக கூறப்படுவது குறித்தும், இந்தியா-ரஷியா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பை 3-ஆவது நாட்டுக்கு விரிவுப்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்தும் விவாதித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியா, ரஷியா இடையே நீண்டகாலமாக நட்புறவு நீடித்து வருகிறது. இந்த சந்திப்புக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. இதன்மூலம் இருநாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. 2017-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்த சர்வதேச பொருளாதார மாநாட்டுக்கு இந்தியாவுக்கு ரஷியா அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி. அதுபோல ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையவும் ரஷியா உதவியுள்ளது. 

இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் பொறுப்பேற்ற நிலையில் சந்தித்தார். அப்போது இருநாடுகளின் சக்திவாய்ந்த ஜனநாகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பாக விளாதிமீர் புதின் கூறியிருந்தது இந்தியர்களால் இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.

அப்போது உலகளவில் ரஷியா சக்திவாய்ந்த நாடாக மாற்றமடைந்து ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான நட்புறவு வலுப்பெற வேண்டும் என்ற வாஜ்பாய் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.