எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சிரியாவில் கடந்த 2 வாரங்களில் 1,000 பேர் கொலை

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக எம்எஸ்எஃப் என்கிற அமைப்புவெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

Raghavendran

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு, கிழக்கு கெளட்டா பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது. மேலும் கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகின்றன.

மேலும் இங்கு புதிய ராணுவப் பதற்றம் உருவாகி வருவதால், நிவாரணப் பொருள்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எனினும் இதற்காக ஐநா சபை மற்றும் ரஷிய அதிபர் விளாடிமர் புதின் ஆகியோர் தலையிட்டு பொதுமக்கள் வெளியேறவும், போதிய நிவாரணம் சென்றடையவும் அவ்வப்போதாவது போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. நிவாரணம் சென்றடைவதற்கு தற்காலிக போர் நிறுவத்த அறிவிப்புகள் மீறப்படுவதாக சிரியா அரசுப் படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

சிரியா விவகாரம் குறித்து எம்எஸ்எஃப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவிக்கையில், 

தொடர் கோரிக்கைகளுக்கு மத்தியிலும் தற்காலிக போர் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் மருத்துவ, நிவாரண உதவிகள் சென்றடைவதில் சிக்கல் நீடிக்கிறது. போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 

இங்கு போர் காரணமாக கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவ, நிவாரண மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படு அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 4,800 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.