மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜப்பான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்வு

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :11 ஜூலை 2018, 10:45 am

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியதாவது: 

கன மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, 9 பேரைக் காணவில்லை. இனிவரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படலாம். இதனால் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றார். 

முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த மீட்பு நடவடிக்கைகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. இதுவரை 2 மில்லியன் மக்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2.3 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.