கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

முழுமையான அணு ஆயுத ஒழிப்புக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் கிடையாது: வட கொரியாவுக்கு அமெரிக்கா தகவல்  

வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:38 pm

IANS

வாஷிங்க்டன்: வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்கும் பொருட்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.

வடகொரிய தரப்பில் இத்தகைய கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் சமாதானத்தினை நோக்கிய முதல்படி என்று வற்புறுத்தப்பட்ட நிலையில், அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்தது. அத்துடன் முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.      

அப்பொழுது கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முறையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்க தரப்பில் வாய்வழி உறுதிமொழி அளிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரு தரப்பு பேச்சின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதுடன், கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை  நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடகொரியா முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதற்கு முன்னர் கொரிய போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது சாத்தியம் கிடையாது என்று அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹித்தேர் நாரட்டின் அறிக்கையினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'கொரிய தீபகற்ப விவகாரத்தில் நாம் மற்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக முழுமையான அணு ஆயுத ஒழிப்பு என்பது நடைபெற வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.