நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:52 pm

IANS

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு 'தெரிக்-இ-இன்சாப்' என்ற அரசியல் கட்சி ஒன்றினை துவக்கி தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 'தெரிக்-இ-இன்சாப்' கட்சியின் ஆரம்ப கட்டத் தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறியவருமான பாபர் என்பவர் தொடுத்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதின்றத்தில் முறையிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.