பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

26 அடி நீள மலைப்பாம்பினை 'சண்டையிட்டு' கொன்று தின்ற கிராம மக்கள்! 

கிராமவாசி ஒருவரைத் தாக்கிய ஏறக்குறைய 26 அடி நீள மலைப்பாம்பினை இந்தோனேசிய கிராம மக்கள் 'சண்டையிட்டு' கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2017, 7:26 am

ஜகார்தா: கிராமவாசி ஒருவரைத் தாக்கிய ஏறக்குறைய 26 அடி நீள மலைப்பாம்பினை இந்தோனேசிய கிராம மக்கள் 'சண்டையிட்டு' கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாடங் கன்சல் மாவட்டம் உள்ளது. இங்குள்ள பாமாயில் தோட்டம் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் ராபர்ட் நபபன். இவர் நேற்று முன்தினம் பணியிலிருக்கும் பொழுது அருகில் உள்ள சாலையொன்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்றினைப் பார்த்திருக்கிறார். அந்த மலைப்பாம்பானது 7.8 மீட்டர் நீளமுள்ளது. அதாவது ஏறக்குறைய 26 அடி நீளம் கொண்டதாகும். 

உஷாரான ராபர்ட் அதனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். அதன் காரணமாக அது அவரைத் தாக்கியிருக்கிறது. அதனுடன் போராடிக் கொண்டே அவர் உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டிருக்கிறார். வந்த கிராமத்தார்களுடன் சேர்ந்து போராடி அந்த பெரிய மலைப்பாம்பினை அவர்கள் கொன்று விட்டார்கள். இதன் காரணமாக ராபர்ட் நபபன் கடுமையாக காயமாடைந்தார்.

பின்னர் அந்த பாம்பினை ஊர்மக்கள் காட்சிக்காக கட்டித் தொங்க விட்டனர். பின்னர் வெட்டித் துண்டுகளாக்கி, வறுத்து அனைவரும் சேர்ந்து உண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மலைப்பாம்புடனான சண்டையில் ராபர்ட் நபபனின் கை மோசமாக சேதமடைந்துள்ளது. அநேகமாக அது முழுமையாக நீக்கப்படலாம். இத்தனை பெரிய மலைப்பாம்பு என்பது இங்கு அதிசயமான ஒன்றில்லை.பாம்பினை அவர்கள் சாப்பிட்டது பற்றிக் கூறும் பொழுது அவர், 'அங்கு இருந்த நண்பர்கள் பாம்பு உணவு மிகவும் சுவையாக இருந்ததாகக் கூறினார்கள். 7 மீட்டர் பாம்பு என்றால் அது உண்மையிலேயே மிக அதிகமான உணவுதான்' என்று அவர் தெரிவித்தார்.             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.