வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இடையே வார்த்தை மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரியை 'திருடர்' என்று வர்ணித்துள்ளார் டிரம்ப். அதே நேரத்தில் டிரம்பை ஒரு 'சர்வாதிகாரி' என்று விமரிசனம் செய்துள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
58-வது அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இரு கட்சி ஆட்சிமுறை உள்ள அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவரை 'திருடர்' என்று கூறிய டிரம்ப், இ-மெயில் குற்றச்சாட்டுகளுக்காக ஹிலாரி சிறையில் தள்ளப்பட வேண்டும் என்றார்.
ஹிலாரி கிளிண்டன் இ-மெயில் மூலம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டிருந்தார் என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஹிலாரி கிளிண்டன் தனக்கு சமமான போட்டியாளர் இல்லை என்று கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
இதனிடையே டிரம்ப் ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் குடியேறுபவர்கள் குறித்து மட்டுமே டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகிறார். இது ஒரு அரசியல் 'ஸ்டண்ட்' ஆகும்.
அனைவரின் கவனத்தை பெறும் வகையிலும், தொலைக்காட்சிகளில் தனது முகம் வர வேண்டும் என்ற நோக்கிலேயும் டிரம்ப் இவ்வாறு பேசி வருவதாக ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


