திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாகிஸ்தான் ஆளுநரைக் கொன்ற முன்னாள் காவலருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:39 pm

IANS

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இஸ்லாமாபாத்தின் கோஹ்சார் சந்தையில் ஆளுநர் தசீரை 28 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் கட்ரி.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், கட்ரிக்கு மரண தண்டனை விதித்தது.

இறை சக்தியை நிந்திப்பதை தடுக்கும் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிராக தஸீர் கருத்துக் கூறியிருந்ததால் அவரைக் கொன்றதாக வழக்குப் போடப்பட்டது.

இந்த நிலையில், இன்று கட்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறைச்சாலை உள்ள பகுதியில் கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.