மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பிரான்ஸில் இஸ்லாமிய தொழுகைக் கூடம் மீது தாக்குதல்

பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

PTI

பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

கார்ஸிகா தீவின் தலைநகரம் அஜாக்கியோவில், தீயணைப்புப் படையினர் மீது ஒரு கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தியது.

அந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆதரவாகவும் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இஸ்லாமியத் தொழுகைக் கூடத்தின் கதவை உடைத்து, அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து, நகரிலுள்ள பிற இஸ்லாமியத் தொழுகைக் கூடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். தீயணைப்புப் படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது. அதற்குப் பதிலடியாக, வழிபாட்டுக் கூடம் அடித்து நொறுக்கப்பட்டதும் ஏற்கத் தக்கதல்ல என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.