கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத்த காட்டுத் தீ: 100க்கும் அதிகமான சுற்றுலா விடுதிகள் சேதம்
தெற்கு ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயால் 100க்கும் அதிகமான சுற்றுலா வீடுகள் எரிந்து நாசமாயின.


தெற்கு ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயால் 100க்கும் அதிகமான சுற்றுலா வீடுகள் எரிந்து நாசமாயின. எனினும், இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.
வே ரிவர், செப்ரேஷன் கீரிக் ஆகிய இரு சுற்றுலா நகரங்கள் மெல்போரின் நகரின் தென்மேற்கே அமைந்துள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்ககாக ஏராளமானோர் இங்கு நேற்று வந்திருந்தனர்.
கடற்கரை ஓரமிருந்த காட்டிலிருந்து பரவிய தீ, இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கும் பரவியது. தீ வேகமாக பரவியதால் வே ரிவர், செப்ரேஷன் கீரிக் ஆகிய நகரங்களில் இருந்த 116 சுற்றுலா வீடுகள் தீக்கிரையாயின.
தீ வேகமாகவும், கடுமையாகவும் இருந்தது என விக்டோரியா மாகானத்தின் பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார். எனினும், இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஆண்ட்ரூஸ், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 173 பேர் இறந்து போனதை நினைவுகூர்ந்தார்.
500க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலிருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டமானது வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெளிவாக தெரிந்தது.
கடந்த 19 ஆம் தேதி கடற்கரை நகரான லோர்னே அருகே மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ ஏற்பட்டது. வெயில் அதிகமாக இருந்ததால் தீ அருகிலிருந்த நகரங்களுக்கும் பரவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...