பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அற்புதங்களை அளிக்கும் அன்னை...

அடிமுடி சித்தர், பாம்பன் சுவாமிகள், போளூர் விட்டோ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களோடு பழகியவர் ஸ்ரீ சக்கரத்து அம்மன்.

News image
Updated On :25 ஜூலை 2025, 11:01 am

பனையபுரம் அதியமான்

சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, அடிமுடி சித்தர், பாம்பன் சுவாமிகள்,போளூர் விட்டோ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களோடு பழகியவர் ஸ்ரீ சக்கரத்து அம்மன்.

"எங்கு செல்ல வேண்டுமென்றாலும் பறவை போல பறந்து செல்லும் ஆற்றலை பெற்றவர் சக்கரத்து அம்மையார்' என்று திரு.வி.க. தன்னுடைய நூலிலே பதிவு செய்திருக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயமான பெரியநாயகி உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் தொண்டு செய்யும் சிவாச்சாரியார் மகளாக அனந்தாம்பாள் என்ற திருநாமத்துடன்

1854}இல் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரின் தாயார் இளம் வயதில் சிவ பதவி அடைந்துவிட, சிறிய தாயார் அன்பில் வளர்ந்தார். இவர் சிவ ஆகமங்களைப் பயின்று, தேவிகாபுரம் பெரியநாயகி சந்நிதி எதிரில் அமர்ந்து பல மணி நேரம் நிஷ்டையில் இருப்பார்.

அனந்தாம்பாளுக்கு ஒன்பது வயதாகும்போது, சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் வசித்த மடாதிபதி சாம்பசிவம் என்பவருக்கு மனைவியாகினார். சில ஆண்டுகளில் கணவர் சிவபதம் அடைந்துவிட, தான் வசித்த வீட்டின் மாடியிலே பத்து ஆண்டுகள் கடும் தவம் இயற்றினார். அப்பொழுது ஸ்படிக லிங்க பூஜையும் , சக்கர பூஜையும் செய்ததால் இவரை "ஸ்ரீ சக்கரத்து அம்மா', என்று அழைத்தனர். இதுவே "சர்க்கரை அம்மா' என்றாகிவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நட்சத்திரக் கோயிலில் உள்ள முருகன் கோயில் அருகே குணாம்பாள் என்ற சித்தரை சந்தித்து, அவரின் அருளுக்கு பாத்திரமாகி பறக்கும் ஆற்றலை பெற்றார். அதுமுதல் இவர் "பறவை அம்மா' என்று அழைக்கப்பட்டார். 1901-இல் மாசி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவர் ஜீவசமாதி அடைந்தார்.

அவருடைய கோயில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. இதை தலைமைச் சீடர் மருத்துவர் நஞ்சுண்ட ராவ் பரம்பரையினர் பராமரித்து வருகின்றனர். சக்கரத்து அம்மையின் 171 }ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, ஆடிப்பூரவிழா ஜூலை 28 (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

"நம்பிக்கையோடு நாடிவருவோருக்கு அதிசயங்களை நிகழ்த்துகிறார். நோய் தீர்த்தல், திருமணத் தடை நீக்குதல், குழந்தை பாக்கியம் அருளுதல் உள்ளிட்ட அற்புதங்களை அளிக்கிறார்' என்கின்றனர் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.