ஒவ்வொருவரின் உள்ளத்தின் இயல்புகளைக் குறிப்பிடுவதே உளவியலாகும். மனித வாழ்க்கையில் அகத் தோற்றம், புறத்தோற்றம் என்ற இரு நிலைகள் உண்டு. அகச் செயல்பாடுகளே உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அவை புறத்தோற்றத்தின் வழி புலனாகின்றன. புறத்தார்க்குப் புலப்படுவது புறத்தோற்றம் மட்டுமேயாகும்.
களவுக்கால வாழ்க்கை நன்முறையில் இயங்குகிறது. களவானது கற்பில் முடியப் பொருள் தேடி வருதல் கடமையாகவும் முதன்மையாகவும் அமைகிறது. திருமணம் செய்து கொள்ளப் பொருள் தேடிச் சென்றான் தலைவன். அவனைக் காணாதவிடத்து அவள் மனம் கடலலை போல் நிலைகொள்ளாது தவிக்கிறது. அப்போது, அவன் நாட்டின் சோலைப் பகுதியையும் அங்கே மக்கள் உவகையுடன் இணைந்து குலவி இருப்பதையும் எண்ணிப் பார்க்கிறாள். அச்சூழலில் தலைவிக்கு கனவு தோன்றுகிறது. அக்கனவில் தலைவனும் தானும் சேர்ந்திருப்பது போல் கண்டு விழிக்கிறாள். இதைத் தன் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள்.
தோழியே! நம் ஊரிலே இருக்கும் மாமரத்தின் கிளையைப் பற்றித் தொங்கும் வெளவாலானது அழிசி என்னும் சோழ மன்னனுக்குரிய பெருங்காட்டில் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைச் சுவைத்தது போலக் கனவு கண்டது. அதே போன்று நானும் அவரோடு இணைந்திருப்பதாய்க் கனவு கண்டேன் என்கிறாள்.
உள்ளுர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில்
பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசியம்
பெருங்காட்டு
நெல்லியம் புளிச்சுவைக்
கனவி யாஅங்கு
......
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும்
நினைந்த அப் பகலே
-(நற்றிணை 87)
என்ற நற்றிணைப் பாடலில், வெளவாலின் கனவோடு தலைவி கண்ட கனவு ஒப்பிடப்பட்டுள்ளது.
தன் சொந்த ஊரில் இருந்து கொண்டு, வெளவால் எங்கேயோ விளைந்த பழத்தை உண்ண விரும்புகிறது. கனவு காண்கிறது. அக்கனவு பகற்கனவு என்பதால் பலிக்காது. மேலும், வெளவால் இருக்குமிடம் வேறு; கனியிருக்குமிடம் வேறு. அந்த வெளவாலைப் போன்றே தலைவியும் ஊரில் இருந்து கொண்டு எங்கேயோ பொருள் தேடிச் சென்ற தலைவனை எண்ணி வருந்துகிறாள். தன்னை வெளவாலோடு ஒப்பிட்டுச் சொல்வது அவளது வருந்திய உள்ளத்தின் உளநிலையையும், ஆற்றொணாத்துயரத்தையும், இரங்கலையும் காட்டுகிறது.
இவ்வாறு பாடுதலின் வழி தலைவியின் மனத்துயர் சற்று குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

கனவுகளைப் பற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

கனவு நனவாகியிருக்கிறது! தொல். திருமாவளவன் பேட்டி! | VCK

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்காது! - திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



