சங்க காலப்புலவர்களின் போராட்டக்கள விறுவிறுப்பை என்னென்பது ?
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன். பொருள் (756)
என்ற குறளில் வள்ளுவர் அரசுக்கான வரிப் பொருள் பற்றிக் கூறினாலும், அவ்வரி விதிப்பின் பாதிப்பைப் பற்றிக் கூறும்போது,
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)
நீதி வழங்கும் மன்னன் குடிகளை வருத்தி வரிவாங்குதல் என்பது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமாகும் என்றது சிந்தனைக்குரியதாகும்.
பல்வேறு கோரிக்கைகளால் இந்நாளில் வேளாண் மாந்தர்கள் ஆங்காங்கே போராடும் வேளையில், அவர்களது போராட்டம் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, ஆளும் ஆட்சிக்கான வெற்றி முரசு கொட்ட முடியாது என்பதையும் வள்ளுவர் குறிப்பாக இடனறிதல் என்ற அதிகாரத்தின் குறளால் கூறுவதாக உள்ளதை எண்ணிப் பார்ப்பதும் குறளின் நடப்பியலை நினைப்பிப்பதாக உள்ளனது.
சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது. (322)
என்ற குறட்குப் பரிமேலழகர் விசேட உரை கூறுகையில், போராடும் ஆண்மை உடையாரைச் சிறுமை நோக்கி அதாவது எளிமையாய்க் கருதிப் போராட்டத்தை ஒடுக்கினால் போராடுவோர் போராடும் இடத்தைவிட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினர் ஆவர் என்பதால் அரசர்க்குப் பெரும்படை உடையுமாம் என்ற எச்சரிக்கை எழுத்து நீள நினைப்பிற்குரியதாம் என்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு தேடி ரேஷன் பொருள் கொடுத்த ஊழியா் நாய் கடித்து காயம்

வள்ளுவர் கண்ட பாவை

HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து! தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



