லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்!

வள்ளுவர் குறளில் கூறிய அரசின் வரிப்பாதிப்புகள்!

Updated On :23 ஜூன் 2024, 11:28 am

சங்க காலப்புலவர்களின் போராட்டக்கள விறுவிறுப்பை என்னென்பது ?

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன். பொருள் (756)

என்ற குறளில் வள்ளுவர் அரசுக்கான வரிப் பொருள் பற்றிக் கூறினாலும், அவ்வரி விதிப்பின் பாதிப்பைப் பற்றிக் கூறும்போது,

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு (552)

நீதி வழங்கும் மன்னன் குடிகளை வருத்தி வரிவாங்குதல் என்பது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமாகும் என்றது சிந்தனைக்குரியதாகும்.

பல்வேறு கோரிக்கைகளால் இந்நாளில் வேளாண் மாந்தர்கள் ஆங்காங்கே போராடும் வேளையில், அவர்களது போராட்டம் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, ஆளும் ஆட்சிக்கான வெற்றி முரசு கொட்ட முடியாது என்பதையும் வள்ளுவர் குறிப்பாக இடனறிதல் என்ற அதிகாரத்தின் குறளால் கூறுவதாக உள்ளதை எண்ணிப் பார்ப்பதும் குறளின் நடப்பியலை நினைப்பிப்பதாக உள்ளனது.

சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது. (322)

என்ற குறட்குப் பரிமேலழகர் விசேட உரை கூறுகையில், போராடும் ஆண்மை உடையாரைச் சிறுமை நோக்கி அதாவது எளிமையாய்க் கருதிப் போராட்டத்தை ஒடுக்கினால் போராடுவோர் போராடும் இடத்தைவிட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினர் ஆவர் என்பதால் அரசர்க்குப் பெரும்படை உடையுமாம் என்ற எச்சரிக்கை எழுத்து நீள நினைப்பிற்குரியதாம் என்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.