வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்!

வள்ளுவர் குறளில் கூறிய அரசின் வரிப்பாதிப்புகள்!

Updated On :23 ஜூன் 2024, 4:58 pm IST

சங்க காலப்புலவர்களின் போராட்டக்கள விறுவிறுப்பை என்னென்பது ?

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன். பொருள் (756)

என்ற குறளில் வள்ளுவர் அரசுக்கான வரிப் பொருள் பற்றிக் கூறினாலும், அவ்வரி விதிப்பின் பாதிப்பைப் பற்றிக் கூறும்போது,

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு (552)

நீதி வழங்கும் மன்னன் குடிகளை வருத்தி வரிவாங்குதல் என்பது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமாகும் என்றது சிந்தனைக்குரியதாகும்.

பல்வேறு கோரிக்கைகளால் இந்நாளில் வேளாண் மாந்தர்கள் ஆங்காங்கே போராடும் வேளையில், அவர்களது போராட்டம் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, ஆளும் ஆட்சிக்கான வெற்றி முரசு கொட்ட முடியாது என்பதையும் வள்ளுவர் குறிப்பாக இடனறிதல் என்ற அதிகாரத்தின் குறளால் கூறுவதாக உள்ளதை எண்ணிப் பார்ப்பதும் குறளின் நடப்பியலை நினைப்பிப்பதாக உள்ளனது.

சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது. (322)

என்ற குறட்குப் பரிமேலழகர் விசேட உரை கூறுகையில், போராடும் ஆண்மை உடையாரைச் சிறுமை நோக்கி அதாவது எளிமையாய்க் கருதிப் போராட்டத்தை ஒடுக்கினால் போராடுவோர் போராடும் இடத்தைவிட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினர் ஆவர் என்பதால் அரசர்க்குப் பெரும்படை உடையுமாம் என்ற எச்சரிக்கை எழுத்து நீள நினைப்பிற்குரியதாம் என்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.