பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
பணிப்பெண் நெல் குத்தப் பயன்படுத்தும் உலக்கை மேல், தெறிக்கும் தானியத்தைத் தின்பதற்காகக் காக்கை அமர்ந்தால் அது நிலையாக அமர்ந்து இருக்க முடியாது.


நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார். (பாடல்: 328)
பணிப்பெண் நெல் குத்தப் பயன்படுத்தும் உலக்கை மேல், தெறிக்கும் தானியத்தைத் தின்பதற்காகக் காக்கை அமர்ந்தால் அது நிலையாக அமர்ந்து இருக்க முடியாது. உலக்கை மேலும் கீழும் உயர்ந்து தாழ்வதற்கு ஏற்பக் காக்கையும் மாறி மாறி அமர்தல் வேண்டும். அது போன்று சிலர், செல்வத்தின் மேல் ஆசை கொண்டு, யார் கூடுதலாகப் பொருள் தருவார் என்பதற்கு ஏற்ப வேந்தர் பலரிடம் வேலைக்கு அலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...