எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நன்கு முதிர்ந்த தேங்காய்க் குலையில் தேங்காய்கள் பலவாக இருப்பதால் உரசி உரசித் தாமே வயல்களில் வீழும் நீர்வளம் மிக்க நாடனே!

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:34 pm

தினமணி


விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல், - பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர - அஃதே, நன்
நெய்த்தலைப் பால் உக்குவிடல்      (பாடல்: 339)

நன்கு முதிர்ந்த தேங்காய்க் குலையில் தேங்காய்கள் பலவாக இருப்பதால் உரசி உரசித் தாமே வயல்களில் வீழும் நீர்வளம் மிக்க நாடனே! விழுமியங்களைத் தொடர்ந்து பின்பற்றிவரும் பாரம்பரியத்தில் வந்தவர் சிறந்த ஒழுக்கமுடையவராக வாழ்வர். அவர்தம் வாழ்வு பசுநெய்யின் மேல் மேலும் பாலை ஊற்றியது போன்று இனிமையைத் தருவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.