எட்டு லட்சம் ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதுகுறித்த ஆராய்ச்சிகள்அதிகரித்து வருகின்றன. தற்போது ஆய்வாளர்களின் கவனம் நவீன மூளையின் தகவல் தொடர்பு மையத்தை நோக்கியுள்ளன. இதை அறிவியலில் டி.எம்.என். என்று அழைக்கின்றனர். அதாவது, மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி உலகம்தான். அவர்களது பிரக்ஞை, மூளை இயக்கத் தொடர்பு எல்லாமே தனித்துவமிக்கது.
இளம்வயதினர் 16 பேரை ஆராய்ச்சிக் குழுவினர் அழைத்து, அவர்களுக்கு 2009-இல் வெளிவந்த "டேகன்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தைத் திரையிட்டனர். அப்போது அவர்களின் மூளை செயல்படும் விதம்
"ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங்' என்ற செயல்முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி உலகத்தில் இருந்தனர் என்பதையும், பிரக்ஞையற்ற நிலையில் அவர்கள் இருந்தபோது அனைவரும் ஒரே மாதிரி உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதையும் கண்டு அதிசயித்தனர். இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதமாக இயங்குகிறது.
படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் சொந்தக் கதையை இணைத்துக் கொள்கின்றனர். பலர் பழைய உணர்வுகளை நினைவாற்றல் அடிப்படையில் நினைக்கத் தொடங்குகிறார்கள். சிலர் படக்காட்சிகளை தங்கள் மனப்போக்கில் "செட்' போட்டு அமைத்து மீண்டும் காண்கிறார்கள்.
இப்படி டி.எம்.என். என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது என்றால், ஒவ்வொருவரின் குணாதிசயமும் தனித்தனியானதாகும். ஒவ்வொரு மனிதனின் டி.எம்.என்.-யையும் படமாக ஆக்கினால் அவர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்தது 40 ஆயிரம் எண்ணங்களை எண்ணுகிறான்.
நவீன காலத்திய மெஷின் லேர்னிங் மாடல்கள் இப்படிப்பட்ட படங்களைத் தொகுத்து, அவற்றை மரபணுக்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நடத்தினால் மனிதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றிச் சிந்தனை செய்ய இந்த டி.எம்.என். உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவியல் ஆயிரம்: முடிவு செய்வதற்கு முன்பே இயங்கும் மூளை!

மஞ்சணத்தி இளையராஜாவுக்காகவே எழுதப்பட்டது: மாரி செல்வராஜ்

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

18.5.1976: துணைக்கோள் தகவல் தொடர்பு பாதிக்கப்படும் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


