டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கரூர் டூ துபை...

பெங்களூரில் பெருநிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரதீப் கண்ணன் தனது பணியைத் துறந்து, சொந்த ஊரான கரூரில் பலூடா ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:36 pm

பெங்களூரில் பெருநிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரதீப் கண்ணன் தனது பணியைத் துறந்து, சொந்த ஊரான கரூரில் பலூடா ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். இந்தத் துணிச்சலான நடவடிக்கையே 'தி பலூடா ஷாப்' உருவாக்கத்துக்கு 2019இல் வழிவகுத்தது. ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதும் மட்டுமன்றி, துபையிலும் என 18 விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளார்.

அவர் தனது வெற்றியின் ரகசியம் குறித்து கூறியது:

'பெங்களூர் ஆரக்கிள் நிறுவனத்தில் காலை 9 முதல் மாலை 5 வரையில் பணியாற்றி வந்த வசதியான வேலையை ராஜிநாமா செய்ததேன். 'நிலையான தொழில், நல்ல சம்பளம், டென்ஷன் இல்லாத வாழ்க்கை' யிலிருந்து விலகி, சொந்த ஊரான கரூர் திரும்பினேன். 'என்னை பைத்தியம்' என்று உடனிருந்தோர் கூறினர்.

பலூடா, ஐஸ்கிரீமை விற்பனை செய்யத் துணிச்சலுடன் முடிவு எடுத்தேன். சிறிய விற்பனை நிலையத்துடன் பயணம் தொடங்கியது. படிப்படியாக 'தி பலூடா ஷாப்' ஆக மாறியது. நான் எடுத்த முடிவு சரியானது என்று விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை கூடியதிலிருந்து உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் அடுத்த லட்சிய 'டி2சி' ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கி வருகிறேன். இது ஓர் ஆரம்பம் மட்டும்தான். புதிய வணிகத்தில் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. அப்படியான குறிக்கோள் எப்போதும் 'சிறந்தது' என்று சொல்ல முடியாது. அர்த்தமுள்ள வேலையைச் செய்வதும், நீண்டகால மதிப்பை உருவாக்குவதும், மதிப்பைக் கூட்டுவதும் வர்த்தகத்தில் ஆரம்பத்தில் எப்போதும் சவாலாகவே இருக்கும்.

நின்று சமாளித்தால் பிறகு வெற்றி தொடர்கதை. எனது வெற்றியைக் கண்டு நண்பர்களுக்கு சந்தோஷம்தான்!' என்கிறார் பிரதீப் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.