தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாரி செல்வராஜின் வாழை!

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "வாழை'.

News image

வாழை படம்

Updated On :28 ஜூலை 2024, 11:59 am

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'வாழை'. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் சிங்கிளான "தென்கிழக்கு தேன் சிட்டு' பாடல் வெளியாகியிருக்கிறது. யுகபாரதியின் வரிகளில் தீ குரலில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது இப்பாடல்.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம், பா.இரஞ்சித், "கூழாங்கல்' இயக்குநர் வினோத்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய இயக்குநர் ராம், முதன் முதலில் "தங்க மீன்கள்' படத்துக்கு லொகேஷன் தேடி நாகர்கோவிலில் இருக்கிற எல்லா மலைகளிலும் ஏறி இறங்கினோம். மாரியுடன் மலை ஏறுவது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். பள்ளத்தாக்கு அளவுக்குக் கதை இருக்கும்.அதே மாதிரி "தங்க மீன்கள்' படப்பிடிப்புக்காக வயநாடுல இருக்கக்கூடிய ஒரு மலைப் பகுதியில ஷூட்டிங் நடத்தினோம். அந்த நேரத்துல எங்களுக்குச் சாப்பாடு வரலை. நான் கீழ இறங்கி பார்க்கப்போனேன். அப்போ என்னோட துணையாக மாரி செல்வராஜ் வந்தான்.

அவன் கருப்பியை கூட்டிட்டு அச்சன்கோவில் மலையில ஏறினதுல இருந்து மலை மேல ஏறிட்டே இருக்கான். அங்கிருக்கிற மலை முகடுகள்ல கொடியை நட்டுக்கிட்டே இருக்கான். மலையிலிருந்து மாரி செல்வராஜ் தன்னுடைய கருத்தை, அரசியலைப் பேசிக் கொண்டேதான் இருப்பான். அதை நாம் கேட்டுதான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.