ரயில்களை இயக்குவதற்கு டீசலோ, மின்சாரமோ இல்லாத ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் எஞ்சின்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன.
பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளை மேம்படுத்தி, 'தேஜஸ்', 'வந்தே பாரத்' ... என விரைவு சொகுசு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது.
டீசல் ரயில்கள் வெளியிடும் புகையும் காற்றில் மாசுக்களைக் கலக்கிறது. அதனால் டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க, பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தத் தேடலில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைத் தொட்டுள்ளது. முதல் முறையாக தண்ணீரில் ரயில் இயக்கப்படவுள்ளது.
'மேம்பட்ட ஹைட்ரஜன்' எரிபொருளாக்கும் தொழில்நுட்பம் மூலம் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், சீனாவுடன் இந்தியாவும் ஐந்தாவது நாடாக இணைகிறது.
சிறப்பு அம்சங்கள்:
ஹைட்ரஜன் ரயிலுக்கான தயாரிப்பு செலவு தோராயமாக ரூ.80 கோடியாகும். ஹைட்ரஜன் ரயிலானது தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜனாகப் பிரித்து ஹைட்ரஜனை எரி பொருளாôகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ரயிலுக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும், அவ்வளவு தண்ணீரைச் சேமிக்க ரயில் பெட்டிகளில் தனி வசதிகள் செய்யப்படும்.
கார்பன் உமிழ்வு கொஞ்சமும் இல்லாத ரயிலான 'ஹைட்ரஜன் ரயில்' வெள்ளோட்டம் இந்த டிசம்பர் மாதமே நடக்கும் என்று ரயில்வே சொல்லியுள்ளது. நாடு முழுவதும் ஹைட்ரஜனில் இயங்கும் 35 ரயில்களை இயக்கப்பட உள்ளன.
ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் அரியாணாவில் 90 கி.மீ. தூரமுள்ள 'ஜிந்த்-சோனிபட்' வழித்தடத்தில் இயக்கப்படும். விரைவில் டார்ஜிலிங், நீலகிரி, சிம்லா மலை வழித்தடங்களில் அறிமுகமாகும். இந்த ரயில் மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை செல்லும். ஒரே ஓட்டத்தில் 1,000 கி. மீ. வரை பயணிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு
ரயில் டிக்கெட் ரத்து கட்டண முறையில் மாற்றம்!

கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ. 5.50 கோடியில் சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம்

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

