அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அதிவேக மங்கை

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 2 வெள்ளியுடன் அதிவேக மங்கை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் தடகள வீராங்கனை அர்ச்சனா.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 12:17 pm


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 2 வெள்ளியுடன் அதிவேக மங்கை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் தடகள வீராங்கனை அர்ச்சனா.

மதுரையைச் சேர்ந்த விவசாயி சுசீந்திரன் மகளான அர்ச்சனா 1994-இல் பிறந்தார். சிறுவயது முதலே தனது மகளை சிறந்த தடகள வீராங்கனையாக ஆக்க வேண்டும் என சுசீந்திரன் இலக்கோடு செயல்பட்டார். அதற்கேற்ப அர்ச்சனாவும் ஆர்வம் காண்பித்தது பலனை அளித்தது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2019-இல் காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் 100 மீ. ஓட்டத்தில் 11.80 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று சாம்பியன் ஆனார். 

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற 36-ஆவது தேசிய விளையாட்டுப் 200 மீ. பிரிவில் 11.41 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கமும், 100 மீ., 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் அர்ச்சனா. 

அவரிடம் ஓர் சந்திப்பு:

அடுத்த இலக்கு என்ன?

சீனாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிகளுக்கு தகுதி பெற்று தங்கம் வெல்ல வேண்டும். 

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் சாம்பியன் ஆனதுக்கு பின் தடகளத்தில் நிலைமை?

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் சாம்பியன் ஆன நிலையில் தடகளத்தில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.