கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பேருந்து எடைக்கு விற்பனை!

ரோய்சன்  ஜோசப். 20   சுற்றுலா ஆடம்பர  சொகுசு பேருந்துகளுக்கு  உரிமையாளர். கொச்சியைச்  சேர்ந்தவர். சுற்றுலா பேருந்துகள் விற்பனை...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:27 am

பனுஜா


ரோய்சன் ஜோசப். 20 சுற்றுலா ஆடம்பர சொகுசு பேருந்துகளுக்கு உரிமையாளர். கொச்சியைச் சேர்ந்தவர். சுற்றுலா பேருந்துகள் விற்பனை... கிலோ ரூபாய் 45 -க்கு எடை போட்டு விற்கப்படும் என்று முகநூலில் விளம்பரம் செய்திருக்கிறார்.

தனது கதையை பகிர்கிறார் ரோய்சன் ஜோசப்:

"கரோனா தாக்கத்திற்கு முன் சுற்றுலாதுறை சிக்கல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.கரோனா தாக்கம் ஏற்பட்டவுடன் சுற்றுலா துறை தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ஒரு இம்மியும் அசையாத போது சுற்றுலா துறையும் ஸ்தம்பித்தது. ஊரடங்குகள் தளர்த்தப்பட்டாலும் சுற்றுலா பேருந்துகள் கேரளத்தில் ஓடவில்லை. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான்... இந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவாக சுற்றுலா பஸ்களுக்கு தேவை அதிகமாகும். இந்த மாதம் மூன்று பஸ்களுக்குத்தான் ஓட்டம் கிடைத்தது. இப்போதைய நிலைமை இப்படி என்றால் சென்ற இரண்டு ஆண்டுகளின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம்.

பேருந்துகள் அனைத்தையும் வங்கிக் கடனில் வாங்கினேன். தவணை கட்ட முடியாததால் பத்து பேருந்துகளை கேட்ட விலைக்கு விற்றுவிட்டேன். விற்று வந்த பணத்தில் கடனை கொஞ்சம் அடைத்தேன். மீதமுள்ள பஸ்களை எடைக்கு கிலோ 45 ரூபாய் வைத்து விற்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் நான் மட்டும் அல்ல எல்லா சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். தவணைத் தொகையைக் கட்டு என்று வங்கிகள் நெருக்கடிதருகின்றன.

கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வரத் தொடங்கிவிட்டார்கள். நிம்மதி போய் விட்டது. தூக்கம் போய்விட்டது. கடன் கொடுத்தவர்கள் வங்கி உட்பட பேருந்துகளை பறிமுதல் செய்கிறார்கள். பேருந்துகள் ஓடவில்லை என்றாலும் அரசுக்கு வாகன, சாலை வரி கட்டியாக வேண்டும். அதில் அரசு சலுகையையும் காட்டவில்லை. காலாண்டு வரி மட்டும் நாற்பதாயிரம் ரூபாய் ஆகிறது.. பேருந்துஓடாமல் எப்படி இவ்வளவு பெரிய தொகையைக் கட்டமுடியும்' என்று அழாத குறையாகச் சொல்கிறார் ரோய்சன் ஜோசப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.